ஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான்.
ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.
உடலை உள்ளடக்கிய சவப்பெட்டி தனி
விமானத்தில் ஏற்றப்பட்டபோது கதறி அழும் அவரது மனைவியும், குழந்தைகளும்,
பொதுமக்களும் இடம் பெற்றுள்ள ஒரு படம் காண்போரை கலங்கச் செய்கிறது.
young and dynamic |
with his tender children |
ஓர் அரங்கில் இருபது நிமிடத்துக்கு ஒருமுறை பதினைந்து நிமிட காணொளிக்
காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி
கண்முன்னால் விரிகிறது.
while seeing from sixth floor |
நடுத் தெருவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த மாமனிதர் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்
கென்னடி அவர்கள்.
அந்தக் கருப்பு நாள் நவம்பர் இருபத்து
இரண்டு. 1963 ஆம் ஆண்டு.
அந்தச் சோக வரலாற்றைச் சுமந்து
கொண்டுள்ள இடம் ஃபோர்ட் ஒர்த், டெல்லாஸ், வடக்கு டெக்சாஸ் மாநிலம், அமெரிக்கா.
நான் பதினோரு வயது சிறுவனாக
இருந்தபோது பள்ளியில் நடந்த காலை வணக்கக் கூட்டத்தில் அப்போதிருந்த தலைமையாசிரியர்
தெரேஸ்நாதன் அவர்கள் கென்னடி சுடப்பட்ட சம்பவம் குறித்துப் பேசினார். அந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை அறுபத்தாறு வயது இளம் முதியவராக சென்று கண்ணீர்
மல்கப் பார்த்தேன்.
அவரை மறந்தவர் கூட, அவரது புகழ்
பெற்ற வாய்ச்சொல்லை மறக்க மாட்டார்கள்.
“நாடு உனக்கு என்ன செய்தது என்று
கேட்காதே. நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்”
...................................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
வேதனையான மறக்க இயலாத நிகழ்வுதான் ஐயா
ReplyDeleteமறக்க முடியாதது...
ReplyDeleteNandru, paaraatukal,negilchi
ReplyDeleteகென்னடியின் ம்ரணம் அதிக வேதனையைத் தருவதாகும்.
ReplyDeleteஅருமை! சமீபத்தில் நான் அபுதாபியில் லூவர் அருங்காட்சியகம் சென்றிருந்தேன். ஆளை அசரடிக்கும் காட்சியகம்.
ReplyDelete"My fellow Americans, ask not what your country can do for you, ask what you can do for your country." One of the important quotes I refer often during my interaction with school / college children.
ReplyDeleteநாடென்ன செய்தது நமக்கு.... எனக் கேள்விகள் கேட்பது எதற்கு...நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு.....!
“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்//
ReplyDeleteஆம் மறைந்த நம் அப்துல்கலாம் ஐயா கூட இதைச் சொல்லிவந்தார்...
நல்லதொரு பதிவு...படங்களுடன் விவரணம் அருமை ஐயா
கீதா
Good Information Sir.
ReplyDelete1963 ஆம் ஆண்டு நிகழ்ந்த துயரச் சம்பவத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளீர்கள். கென்னடியின் மறைவு பலநாட்கள் சிலாகித்துப் பேசப்பட்டது. அப்போது தங்களைப் போலவே நானும் பள்ளி மாணவன். (Fifth Form).
ReplyDelete