வழக்கம்போல் இந்த வாரமும் கனடா நாட்டில் நாங்கள் வாழும் பகுதியில் உள்ள உள்ளூர் நூலகத்திற்குச் சென்றேன். படிப்பதற்காகச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டுக்குச் சென்று தின்னலாம் என்று கூறி அப்பா கடையில் வாங்கித் தந்த தின்பண்டத்தில் அங்கேயே சிறிதை வாயிலே போட்டுச் சுவைக்கின்ற சிறு பிள்ளையைப்போல் அவற்றுள் ஒரு நூலை அங்கேயே அமர்ந்து புரட்டினேன். சிறிது நேரம் ஆனதும் அது என்னைப் புரட்டிப் போட்டது.