கபிலா மருத்துவமனை என்பது கரூர் நகரில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த மருத்துவ மனையாகும். அது ஓர் ஐந்துடு விடுதி போன்று
இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை வசதியாக நிறுத்த முடியும்.
இந்த நூலாசிரியர் திரு.த.ப.சுப்பிரமணியன் அவர்கள்
எழுபத்தேழு வயது இளைஞர். நான் அவரினும் பத்து வயது இளையவன். அவரும் நானும் சம
காலத்தில் தமிழாசிரியர், தலைமையாசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எனப் பற்பல
பதவிகளை ஏற்று இணைந்துப் பணியாற்றியவர்கள்.
தமிழ்ப் பற்றுக் காரணமாக மரபை மீறி வருகைப் பதிவேட்டிலும் பிற ஆவணங்களிலும்
தமிழில் கையொப்பம் இட்டவர்கள்; இடுகிறவர்கள்.
மூன்று நாள்களுக்கு முன்னால்
அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங்
குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில்
அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.