இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவை நோக்கிய
இனிய பயணம் தொடங்க உள்ள நிலையில், நிறைவாக நிறைவான ஒரு பதிவை இடும் நோக்கில்
மடிக்கணினியைத் திறக்கிறேன்.
Wednesday 28 March 2018
Tuesday 27 March 2018
பணமதிப்பு இழக்காத பணம்
பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த
அமெரிக்க நாட்டின் பணத்தாள் இன்றும் செல்லும் என்றால் வியப்பாக உள்ளதா? சுதந்திரம்
அடைந்தபின் நான்கு முறைகள் பணமதிப்பு இழக்கச் செய்த நாட்டில் வாழும் நமக்கு
வியப்பாகத்தான் இருக்கும்.
Monday 26 March 2018
கலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்
ஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான்.
ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.
Tuesday 20 March 2018
மறக்க முடியாத மரக்கா Arboretum
ஆர்போரீட்டம் (Arboretum)
என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மரங்களின் தொகுதி அல்லது கூட்டம் எனப் பொருள்
சொல்லலாம். குறிப்பாகச் சொன்னால் வெவ்வேறு பெயருடைய மரங்களை ஒரு பெரும்பரப்பில் நட்டு
வளர்ப்பதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரங்கள் நிறைந்த சோலை என்னும்
பொருள் தரும் வகையில் மரக்கா என்னும்
புதிய சொல்லை நான் உருவாக்கியுள்ளேன்.
Thursday 15 March 2018
புத்துணர்வு தரும் பூங்கா
ஒரு நூறு ஏக்கர் பரப்பில், அதுவும்
நகரின் நடுவில், ஓர் அழகான தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது என்னும் செய்தியை
நம்பாமல்தான் அங்கு போனேன். நம்பினேன் நேரில் பார்த்தபின்.
Thursday 8 March 2018
இந்தியாவின் இனிய மகள்
விடுதியில் தங்கிப் படிக்கும்
பள்ளிச் சிறுவன் வீட்டு நினைப்பு அதிகமாகி, விடுமுறையில் வீடு திரும்ப ஏங்கிக் காத்துக்கிடப்பது
போல இப்போது என் மனநிலை உள்ளது. அவனுக்கு வீட்டு நினைப்பு; எனக்கு நாட்டு
நினைப்பு. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தியாவுக்கு விமானம் ஏறும் அந்த இனிய நாள்-
இந்த மாதம் இருபத்து எட்டாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.
Saturday 3 March 2018
மெல்ல இனி வாழும்
பண்டைத் தமிழரின் கவி மரபு வியப்புக்குரியது.
ஆடவர்க்கு இணையாக மகளிரும் யாப்பிலக்கணம் அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்கப்
பாக்களைப் பாடியுள்ள பெண்பாற் புலவர்களே சான்றாக அமைவர். மேலும் சமூகத்தில்
வாழ்ந்த பல்வகைத் தொழில் செய்தாரும் பாங்குற பாவியற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர்.
மருத்துவன் இளநாகனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார்
ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அப்படி அவர்கள் இயற்றிய பாவகைகளில்
ஒன்று சித்திரக் கவி என்பதாகும். சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு
பாக்களைப் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்.
பாம்புகள் பிணைந்து நிற்பதாகப் படம்
வரைந்து அவற்றின் மீது கவிதை வரியை அமைத்தார்கள். இதற்கு நாக பந்தம் என்று பெயர்.
இறைவன் உலாவரும் தேர் போன்ற படத்தில் பா அமைத்து இரதபந்தம் என்று அழைத்தார்கள்.
இப்படி இச் சித்திரக் கவி பலவகைப்படும்.
சென்ற நூற்றாண்டுவரை இச்
சித்திரக் கவிமரபு தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. இப்போது அத்தி பூத்தாற்போல்
சிலரே முயல்கின்றனர். இவ்வகைக் கவிதைகளைப் படித்துப் பாராட்டுவோரும் இல்லை.
கொள்வோர் இல்லையேல் கொடுப்போரும் இல்லாமல் போவர் என்பது உண்மை.
நான் கடந்த ஒரு மாதமாக என் தூக்கத்தைத்
தொலைத்துவிட்டுப் பல சித்திரக் கவிகளை இயற்றினேன். அவற்றில் சிலவற்றை வலைப்பூ
வாசகரிடையே அரங்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Subscribe to:
Posts (Atom)