Saturday 28 November 2020

கட்டுரைக்கும் கண்ணில்லை

   காதலுக்குதான் கண்ணில்லை என்பார்கள். ஆனால் கட்டுரைக்கும் கண்ணில்லை என்பது இப்போது தெரிய வருகிறது. ஆம். தினமணியில் இம்மாதம் இருபதாம் நாள் வெளிவந்த “மநுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?’ என்னும் கட்டுரைக்குக் கண்ணில்லை என்பதற்கு அக் கட்டுரையால் எழுந்த எதிர்வினைகளே சான்று.

Tuesday 24 November 2020

கடுங்குளிரைக் கொண்டாடும் கனடா

    கனடா நாட்டில் இரண்டே பருவங்கள். ஒன்று வசந்த காலம்; இன்னொன்று மழைக்காலம். அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரையிலும் மழைக்காலம் என்று சொல்லப்பட்டாலும் மழைப்பொழிவைவிட பனிப்பொழிவுதான் அதிகமாக இருக்கும்.

Wednesday 18 November 2020

முந்நீரும் பன்னீரும்

    இணையதளக் குழு ஒன்றில் முந்நீர் என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்கான சொற்பொருள் விளக்கத்தைப் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 முந்நீர் என்ற சொல்லுக்கு . கடல்நீர் என்ற பொருள் உண்டு. ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்னும் மூன்று நீர்கள் சேர்ந்ததே கடல்நீர் என்பதால் நம் முன்னோர் கடல்நீரை முந்நீர் என வழங்கினர். இந்த முந்நீர் என்னும் சொல்லுக்கு வேறு பொருள் உண்டா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி.