Sunday 29 March 2020

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்


   
    இப்போது மக்கள் மன அழுத்தத்தில் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதற்கு நகைச்சுவை ஒன்றுதான் மாற்று மருந்து. இன்றைய சூழலுக்கேற்ற நகைச்சுவை துணுக்குகள் சிலவற்றை உருவாக்கி இங்கே பதிவிடுகிறேன்.

“மருமகளே! ஆச்சரியமா இருக்கு.
எண்ட்ற பேரன் கறிவேப்பிலைய
ஒதுக்கி வக்காம திங்கறான்.
என்னடி மந்திரம் போட்ட?”

“கறிவேப்பிலை தின்னா
 கொரோனா வராதுன்னு சொன்னேன்” 
        &&&&&&&&

“ஏண்டா எண்ட்ற பேரனைப் போட்டு
 இப்பிடி அடிக்கிற”

“பின்னே என்னாம்மா. பரீட்சை எழுதாம
 பாஸ் ஆகிறதுக்கு அடுத்த வருஷமும்
கொரோனா வருமான்னு கேக்கிறான்.”
       &&&&&&&&

கணவன்: “போ போ போய்த்தொலை!”

மனைவி: “நீங்க சரியான ஆம்பிளையாயிருந்தா
          இப்பவே என்ன ரயிலேத்தி  விடுங்க.
          நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்”
              &&&&&&&&&

“என்னால இனிமே என் ஒய்ஃபோட
குடுத்தனம் நடத்த முடியாது”

“ஏம்பா என்னாச்சு/”

“இருமட்டுமா இல்ல
தும்மட்டுமான்னு பயங்காட்றா.”
     &&&&&&&&


மனைவி: “சும்மா சும்மா கைகழுவினா மட்டும் ஆச்சா. அப்படியே அப்பப்ப
          விழற பத்துப் பாத்திரங்களையும் கழுவி வைக்கணு”
கணவன்:!?!?!?
                 &&&&&&&&&

“ஹலோ காமு இந்த க்வாரண்டையனோட தாக்கம் எங்காத்துல நன்னாவே தெரியறது. ஆமாண்டி... என் மாட்டுப்பொண்ணு உண்டாகியிருக்கிறா.”

“எங்காத்திலயும் அப்பிடித்தான். மூக்கப் பிடிக்க மூணுவேளையும் தின்னுட்டு என் ஆத்துகாரர் குண்டாகியிருக்கிறா”
           &&&&&&&&&&
“அடியே காமு! காலிங் பெல் சத்தம் கேக்குதே..போய் பார்.”

“போலீஸ் வந்திருக்கா ஒங்களை விசாரிக்க”

“நான் ஒரு தப்பும் பண்ணலையேடி.”

“நேத்திக்கு நம்ம ஆத்துக்கு வந்த ஹெல்த் கேர் கேர்ள்கிட்ட நீங்க சிரிச்சிப் பேசி கைகுலுக்கியதை சிசிடிவி யில பாத்துட்டாங்களாம்!.”
          &&&&&&&&&

“ஏங்க இந்த அநியாயத்த கேட்டிங்களா?”

“என்னம்மா வேலைக்காரிகிட்ட சண்ட?”

“அவளுக்கும் ஒர்க் அட் ஹோம் வேணுங்கிறா”.
            &&&&&&&&


ஜெயில் வார்டன்: ஒன்ன தூக்குல போட்ற நாளும் வந்தாச்சு. ஒன்னோட
                  கடைசி ஆசை என்னான்னு சொல்லு”.

கைதி:           “ஒங்க கையப் புடுச்சி கைகுலுக்குனு சார்.”
                 &&&&&&

“ஹலோ மேனேஜர் சாருங்களா?
எனக்கு கோரோனா பாசிட்டிவ் ஆயிடுச்சு.
21 நாள் சம்பளத்தோட லீவு வேணுங்க.
என்ன....குடுக்க மாட்டிங்களா.
அப்பசரி நான் ஒடனே ஆபீசுக்கு வந்துட்றேன்.”
        &&&&&&&

அப்பா: “இப்பவே ஒன்னை கன்னத்தில அறையறேன் பாரு”

மகன்: அறைங்க. ஆனா ஆறடி தள்ளி நின்னு அறைங்க”
        &&&&&&&

“ஏம்பா பச்ச கொழந்தைய இப்படிப் போட்டு அடிக்கிற?”

“ஏ ஃபார் ஆப்பிள்; பி ஃபார் பலூன்ங்கிறான்”

“சரியாத்தானே சொல்றான்”

“அதுக்கப்புறம் சி ஃபார் கொரோனாங்கிறானே!”
       &&&&&
நகைச்சுவை துணுக்குகள் ஆக்கம்
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

Tuesday 24 March 2020

நோயை விரட்டும் நுட்பம் அறிவோம்


    இன்னும் சில வார காலம் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். இதை ஆக்க வழியிலும் அறிவார்ந்த வழியிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்க வழியில் எப்படிப் பயன்படுத்தலாம்?

Saturday 14 March 2020

புலம்ப வைக்கும் புதுநோய்


  கனடா நாடு டொரண்டோ நகரில் வசிக்கும் என் நண்பர் அகில் அவர்கள் நேற்று என்னைப் புலன வழியே அழைத்தார். “நீங்கள் கனடாவுக்கு வருவதைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்” என்று ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை காரண காரியங்களோடு கால்மணி நேரம் பேசினார்.

Saturday 7 March 2020

கொவைட்19 என்னும் கொள்ளை நோய்


  இன்றைய(7.3.2020) நிலவரப்படி இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பத்து நான்கு என நடுவண் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

  Corona Virus Disease என்னும் ஆங்கிலச் சொல் தொடர்களில் சில எழுத்துகளைப் பொறுக்கிப் போட்டு, அதனுடன் அது பிறந்த ஆண்டையும் சேர்த்து, இந்நோய்க்கு COVID19 என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்! உருவாகும் புயலுக்கும் ஒரு பெயர்; பரவிவரும் கொள்ளை நோய்க்கும் ஒரு பெயர்! இனி பிறக்கும் குழந்தைகளுக்கு கரோனா என்றுகூட பெயர் சூட்டுவார்கள்!

  கரோனா நோயின் பாதிப்புக்குள்ளான எழுபது நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆகிவிட்டது.    இந்தச் சூழலில் அந்த நோயின் படையெடுப்பை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.