Tuesday 30 August 2022

கரூர் புத்தாக்கத் திருவிழா

   'முயற்சி திருவினை ஆக்கும்என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப கரூரில் ஒரு புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நூல் அங்காடிகள், பல நூறாயிரம் பேர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து, சற்றேறக்குறைய இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் விற்பனை எனப் பல உச்சங்களைத் தொட்ட மாபெரும் நிகழ்வு என்றால் அது மிகையாகாது.