Thursday 19 July 2018

தமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை

   இந்த நூலாசிரியர் திரு.த.ப.சுப்பிரமணியன் அவர்கள் எழுபத்தேழு வயது இளைஞர். நான் அவரினும் பத்து வயது இளையவன். அவரும் நானும் சம காலத்தில் தமிழாசிரியர், தலைமையாசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எனப் பற்பல பதவிகளை ஏற்று இணைந்துப் பணியாற்றியவர்கள்.      தமிழ்ப் பற்றுக் காரணமாக மரபை மீறி வருகைப் பதிவேட்டிலும் பிற ஆவணங்களிலும் தமிழில் கையொப்பம் இட்டவர்கள்; இடுகிறவர்கள்.

Friday 13 July 2018

ஒரு குருவி நடத்திய பாடம்

   மூன்று நாள்களுக்கு முன்னால் அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங் குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில் அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.