Sunday 19 August 2018

பறவைகள் பறக்கும் அழகே அழகு

இன்று (ஆகஸ்ட் 19) உலக ஒளிப்பட நாள்.
 நான் அண்மையில் கனடா சென்றிருந்தபோது 
மாலை மயங்கும் நேரத்தில்
 நடைப்பயிற்சி மேற்கொள்வதை 
வழக்கமாகக் கொண்டிருந்தேன். 
 அந்நேரத்தில் வானில் பறவைகள் 
பறந்து செல்லும் காட்சிகள் 
என்னை மிகவும் கவர்ந்தன. 
அப்போது நான் எடுத்த ஒளிப்படங்கள் 
சிலவற்றை இன்று பதிவிடுகிறேன்.



















கடவுளின் நாடு கலங்கி நிற்கிறது

      God’s own country என்பது கேரளா சுற்றுலாத் துறையின் முத்திரை வாசகமாகும். அந்தக் கடவுளின் நாடு இன்று கொட்டித் தீர்க்கும் பேய்மழையால் கலங்கி நிற்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அரசு இயந்திரத்தை உரிய முறையில் இயக்கி, மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார்.

Thursday 9 August 2018

கேட்டாரே ஒரு கேள்வி

    உயர்நீதி, உச்ச நீதி மன்றங்களிடத்தில் எனக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. மறைந்த கலைஞரின் உடல் அடக்கம் செய்வது தொடர்பான சிக்கலில் தமிழகம் போர்க்களமாக மாறாமல் தடுத்த பெருமையை சென்னை உயர்நீதி மன்றம் தக்கவைத்துக் கொண்டதை நாமறிவோம்.

Thursday 2 August 2018

தனித்தமிழ்ச் சிறுகதை


  முத்தமெனும் மாமருந்து
 (முனைவர் அ.கோவிந்தராஜூ)


    கபிலா மருத்துவமனை என்பது கரூர் நகரில் அமைந்துள்ள  புகழ்வாய்ந்த  மருத்துவ மனையாகும். அது ஓர் ஐந்துடு விடுதி போன்று இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில்   வாகனங்களை  வசதியாக நிறுத்த முடியும்.