Thursday 16 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 26-30



நெஞ்சம் நிறைந்த நன்றி
  மார்கழி மாதம். இருபத்து ஒன்பது நாள்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து திருப்பாவையின் அந்தந்த நாள் பாசுரத்துக்கு உரை எழுதி ஆறு மணிக்குள் அன்பர்களின் புலனத் தளத்தில் பதிவிடுவது அன்றாட திருப்பணியாய் இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இப்பணியை நிறைவேற்றிட அருள் செய்த இறைவனுக்கு முதல் நன்றி.

Sunday 12 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 21-25


பாடல் எண்: 21
ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
   மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
   ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
   மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
   போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

Sunday 5 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 15-20


பாடல் எண்:15 
photo courtesy: Google
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
    
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாய் அறிதும்
    
வல்லீர்கள் நீங்களே, நான் தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
    
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
    
வல்லானை, மாயானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

Friday 3 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 11-15


பாடல் எண்: 11
கற்றுக் கறவைகள் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறனழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
  புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்னன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
  எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்!