Tuesday, 24 March 2020

நோயை விரட்டும் நுட்பம் அறிவோம்


    இன்னும் சில வார காலம் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். இதை ஆக்க வழியிலும் அறிவார்ந்த வழியிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்க வழியில் எப்படிப் பயன்படுத்தலாம்?

Saturday, 14 March 2020

புலம்ப வைக்கும் புதுநோய்


  கனடா நாடு டொரண்டோ நகரில் வசிக்கும் என் நண்பர் அகில் அவர்கள் நேற்று என்னைப் புலன வழியே அழைத்தார். “நீங்கள் கனடாவுக்கு வருவதைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்” என்று ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை காரண காரியங்களோடு கால்மணி நேரம் பேசினார்.

Saturday, 7 March 2020

கொவைட்19 என்னும் கொள்ளை நோய்


  இன்றைய(7.3.2020) நிலவரப்படி இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பத்து நான்கு என நடுவண் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

  Corona Virus Disease என்னும் ஆங்கிலச் சொல் தொடர்களில் சில எழுத்துகளைப் பொறுக்கிப் போட்டு, அதனுடன் அது பிறந்த ஆண்டையும் சேர்த்து, இந்நோய்க்கு COVID19 என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்! உருவாகும் புயலுக்கும் ஒரு பெயர்; பரவிவரும் கொள்ளை நோய்க்கும் ஒரு பெயர்! இனி பிறக்கும் குழந்தைகளுக்கு கரோனா என்றுகூட பெயர் சூட்டுவார்கள்!

  கரோனா நோயின் பாதிப்புக்குள்ளான எழுபது நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆகிவிட்டது.    இந்தச் சூழலில் அந்த நோயின் படையெடுப்பை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.