Tuesday, 31 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 6-10


ஆறாம் பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
    
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
    
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
    
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

   அருமைப் பெண்ணே! இன்னுமா நீ உறங்குகிறாய்? இது பறவைகள் கீச் கீச் என ஒலி எழுப்பும் விடியற்காலை நேரம். கருடனுக்குத் தலைவனான திருமாலின் கோவிலில் வருக வருக என அழைப்பதுபோல் வெண்சங்கை ஊதுகிறார்களே- அந்தப் பேரொலி உன் செவிகளில் விழவில்லையா?

Thursday, 26 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும்: பாடல் 1-5


   எங்கள் இல்லத்தில் மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி திருப்பாவை வழிபாட்டுக்கு ஆயத்தமாவோம்.

Thursday, 19 December 2019

அந்தோ மறைந்தார் அழகப்ப இராம்மோகன்


  காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு பிறந்தவர் அழகப்ப இராம்மோகன். இயற்பியல் வல்லுநரான இவர் அமெரிக்கா சென்று பல பொறுப்புகளில் பணியாற்றினார். பணிநிறைவுக்குப் பின் தொடந்து அமெரிக்காவில் வசித்த இவர், இலினாய்ஸ் மாநிலத்தில் போலிங்ப்ரூக் என்னும் ஊரில் அமைந்துள்ள தன் வளமனையில் கடந்த 12.12.19 அன்று தன் எண்பதாம் வயதில் இயற்கை எய்தினார்.