Sunday, 18 April 2021

மின்சாரத்தில் இயங்கும் மீனா கார்

    மேகக் கூட்டத்தின் மீது பறப்பது போன்ற உணர்வு சாலையில் காரில் பயணிக்கும்போது கிடைத்தால் எப்படியிருக்கும்! அப்படி ஓர் உணர்வைப் பெற்று மகிழ்ந்தேன். அதன் விளைவே இப் பதிவு.

    ஹுயூஸ்டனில் வசிக்கும் இரவி பர்வத மீனா இணையர் நேற்று என் மகளின் இல்லத்திற்கு விருந்தினராக வந்தனர். அவர்கள் ஓட்டிவந்த மின்சார கார் நேற்று இரவு முழுவதும் என் கனவில் வலம் வந்தது.

Wednesday, 14 April 2021

ஒளிக்கீற்று ஒன்று தெரிகிறது

     வலைப்பூ வாசகர் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் மற்றும் தொல்காப்பியர் திருநாள் வாழ்த்துகள். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    சித்திரைத் தொடக்கமே நல்லதுதான். புதிய நம்பிக்கைகளின் விதைகள் அன்றைக்குத்தானே விதைக்கப்படுகின்றன? “கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப் போகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.

     பெருந்தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்துவிட்டது என்பதே அந்த நல்ல செய்தி.