Saturday, 31 October 2015

நாடாது நட்டலின் கேடில்லை

அறிவும் ஆற்றலும் உடைய அன்பு மகள் புவனாவுக்கு,

   நலம். நலமே சூழ்க. இப்போது நீ வசிக்கும் நாட்டில் தாங்க முடியாத குளிர் என்று உன் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தாய். இப்போது பருவ நிலை எப்படி உள்ளது? கொடும் குளிரைத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்.

    இன்று உன் பிறந்த நாள். முதலில் உனக்கு அம்மாவும் நானும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Tuesday, 20 October 2015

நா காக்கும் நற்பண்பு

   இடம் பொருள் சூழல் அறிந்து பேச வேண்டும் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். யா காவாராயினும் நா காக்க என்று என் பூட்டாதி பூட்டன் வள்ளுவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தீப்புண்ணைவிட நாப்புண் மோசமானது என அவர் மேலும் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.

Monday, 12 October 2015

பார் வியக்கும் பதிவர் திருவிழா

   என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மன நிலையில் சென்ற நான் நடந்த நிகழ்வுகளைக் கண்டு வியந்து போனேன். முகம் தெரியாத பதிவர்களை ஒன்று சேர்ப்பது என்பது பகீரத முயற்சிதான்.

Monday, 5 October 2015

வான் புகழ் கொண்ட வலைப் பதிவர்


  
   வலைப் பூ, வலைத்தளம், வலைப் பதிவர், மின் தமிழ், இணையத் தமிழ் போன்ற சொற்றொடர்கள் தமிழின் வரவுக் கணக்கில் வைக்கத்தக்கத் தகுதியைப் பெற்றுவிட்டன. வலைப் பதிவர் என்பதில் செருக்கும் மிடுக்கும் கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஒரு புதிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. வண்டமிழ் இலக்கிய வரலாற்றில் இனி வலைப் பூக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புதிய பகுதியைச் சேர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.