Wednesday 8 March 2017

மகளிர் நாள் சிறப்புக் கவிதை


கண்ணே! கண்மணியே!
    கண்வளராய் பெண்மணியே!
பண்ணே பைந்தமிழே!
    பண்புள்ள பெண்மகளே!

விண்ணிலே பவனிவரும்
    வெண்மதியும் நீதானோ?
கண்ணிலே ஒளிபேசும்
    கருவிழியும் நீதானோ?

மண்ணிலே பெண்ணாக
    மகளாக வந்து விட்டாய்!
எண்ணிடின் ஏழ்பிறப்பில்
    என்னதவம் செய்தேனோ!

எண்ணென்ப எழுத்தென்ப
    ஏடெடுத்துப் படிமகளே!
கண்ணென்ப கல்வியினைக்
    கருத்தோடு பெறுமகளே!

எண்ணிய எண்ணி யாங்கு
    எய்திடலாம் பொன்மகளே!
எண்ணத்தில் திண்ணம்கொள்
    எழில்மானே! என்மகளே!

                -முனைவர் அ.கோவிந்தராஜூ

2 comments: