Tuesday, 31 October 2017

புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழும் தமிழ்

  கனடாவிற்கும் கவின்மிகு தமிழுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இங்கே தமிழன்னை கழிபேருவகையுடன் களிநடம் புரிகின்றாள். புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழ்கின்றாள்.  இதை டொரண்டோ தமிழ்ச் சங்கத்தில் நேரிடையாகப் பார்த்தேன்.

Thursday, 26 October 2017

நூலக நாடு நூலகம் நாடு

 எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும். நான் நான்காம் வகுப்பில் படித்தபோது எங்கள் ஊர் ஊராட்சி  நூலகம் சென்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. அந்தச் சிறு வயதில் தொடங்கிய நூலக ஆர்வம் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து நூலக அறிவியலில் ஒரு பட்டம் பெறவும் அடித்தளமாக அமைந்தது.

Friday, 20 October 2017

நா.பா. பார்வையில் காதல்

  காதல் என்பது செம்புலப் பெயல் நீரைப்போல் மனங்கலத்தல் ஆகும். உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக் கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது என்னும் கருத்தை நா.பார்த்தசாரதி அவர்கள் தம் நாவல்கள் பலவற்றில்  மணியிடை இழையாக வைத்துள்ளார்.

Monday, 16 October 2017

ஒட்டாவா தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா விழா

  எனது கனடா நாட்டுப் பயணம் நிறைவுக்கு வரும் சமயத்தில் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகிழ்ந்த தருணம் இதுவாகும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சிறப்பாகச் சொல்லி வைத்த ஒளவையாரின் வாயில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டால் சரியாக இருக்கும்.

Sunday, 8 October 2017

நான் பார்த்த சாரதி

 நான் பிஞ்சில் பழுத்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமையா? சிலர் சொல்லிக் கொள்கிறார்களே!. ஆனால் நான் பிஞ்சில் படித்தவன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான். பதினோராம் வகுப்பில் படித்தபோதே நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை எழுத்தெண்ணிப் படித்தவன். பிறகு வளர்ந்து பெரியவன் ஆனதும் முனைவர் பட்டத்துக்காக அவருடைய நாவல்களை எடுத்து ஆய்வு செய்தவன். அவரை நேரில் சந்தித்துப் பேசியவன். இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா?

Monday, 2 October 2017

கனடாவில் காந்தியைக் கண்டேன்

   ஆம். உண்மையில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைப் பார்க்கும் பேறு பெற்றேன். நீங்கள் கல்லில் கடவுளைப் பார்ப்பது உண்மை என்றால் நானும் கல்லில் காந்தியைப் பார்த்தேன் என்பதும் உண்மையே.