Friday, 21 February 2020

தன்மானம் இல்லாத் தமிழன்


           
       மானத்தோடு வாழ்ந்த மறத்தமிழன் இன்றைக்கு மரத்தமிழன் ஆகிவிட்டான். கொங்கு வட்டார வழக்கில் சொல்வதென்றால் ஒணத்தி இல்லாத தமிழன் ஆகிவிட்டான். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை என்று இலங்கைவாழ் தமிழரும் மலேசியத் தமிழரும் நம் காதுபடவே பேசுகிறார்கள்.

Sunday, 16 February 2020

உலகெங்கும் அறிந்த உள்ளூர்ப் பழுத்த பயன்மரம்


    ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுப்பெரிக்க விறகு சுமந்தவர் ஆந்திர மாநில அரசின் ஆலோசகராய் ஆனதை யார் நம்புவார்? திண்ணைப் பள்ளித் தொடங்கி உயர்நிலைப் பள்ளி முடிய தமிழ் வழியில் படித்தவர் பின்னாளில் நடுவண் அரசின் தேர்வாணையக் குழு உறுப்பினராகிக் கொடிகட்டிப் பறந்ததை எவர்தான் நம்புவார்? நானும் நம்பாதவர் கட்சியில்தான் இருந்தேன்.    ஆனால் அந்த மாமனிதரின் வழ்க்கை வரலாற்று நூலைப் படித்தபோது அவர் குறித்தான எனது மதிப்பீடு இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது.