Tuesday, 30 August 2016

பிழை மலிந்த மொழியினாய் போ போ போ

  நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.

Monday, 22 August 2016

சரிந்துவரும் சர்க்கஸ் கலை


      கால வெள்ளத்தில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடுகின்றன. அம்மியும் ஆட்டாங்கல்லும் போன இடம் தெரியவில்லை. அஞ்சாங்காய், பல்லாங்குழி விளையாட இப்போது யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்துச் சிறுவர்களுக்கு சைக்கிள் டயர், பனங்காய்கள் பயன்படுத்தி வண்டிகள் செய்து ஓட்டி விளையாடத் தெரியுமா?

Sunday, 14 August 2016

மறக்கப்பட்ட மாமனிதரும் மருத்துவர் ஜீவானந்தமும்

   நாட்டின் சுதந்திரதின விழாவை முன்னிட்டு தொடர்புடைய நூல் எதையாவது படிக்க வேண்டும் என்ற உந்துதலால் என் இல்ல நூலகத்தை அலசினேன். கண்ணில் பட்ட ஒருநூலை எடுத்து இரண்டு நாள்களில் படித்து முடித்தேன். இந்த மறு வாசிப்பு சுதந்திரப் போராட்டம் குறித்த கூடுதல் புரிதலை என்னுள் ஏற்படுத்தியது.

Tuesday, 9 August 2016

ஆயிரங்காலத்துப் பயிரில் அவசரம் காட்டலாமா?

     திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் சொல் வழக்கு நம் கிராமங்களில் உண்டு. திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த திருவள்ளுவர் இல்லறவியலில் இருநூறு குறட்பாக்களை அமைத்து மிக விரிவாகப் பேசுகிறார். மணமகன் மணமகள் பொருத்தப்பாடு குறித்துத் தொல்காப்பியர் தனி நூற்பாவை அமைத்துள்ளார்.