ஹமீது என்கிற மனுஷ்ய புத்திரனின்
கவிதைகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு.
Wednesday, 29 March 2017
Sunday, 26 March 2017
வேலை அல்லாத வேலை
நேற்று நானும் என் மனைவியும்
பேரங்காடி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். பில் போடும் இடத்தில் கூட்டமாக இருந்தது. “நீ எவ்வளவு நேரம்தான் நிற்பாய் போய் காரில் உட்கார்;
நான் வருகிறேன்” என்று
கூறிவிட்டு வரிசையில் நின்றேன்.
Monday, 20 March 2017
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்?
நம்முடைய எம்.பி.பி.எஸ்; எம்.எஸ்
போன்ற பட்டங்களை அமெரிக்க நாடு துளியும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தும் ஒரு
மருத்துவம் சார்ந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றால்தான் அங்கே படிக்க முடியும்
அல்லது பணியாற்ற முடியும்.
Wednesday, 15 March 2017
வேட்டையாடும் வெறி நாய்கள்
இப்படியும் நடக்குமா? நம்பத்தான்
முடியவில்லை. ஆங்கில நாளிதழில் விலாவாரியாக எழுதியுள்ளார்களே. ஐந்து வெறி நாய்கள்
சேர்ந்துகொண்டு அட்டூழியம் செய்திருக்கின்றன. அதுவும் நம் நாட்டின் தலைநகர்
புதுதில்லியில்.
Wednesday, 8 March 2017
மகளிர் நாள் சிறப்புக் கவிதை
கண்ணே! கண்மணியே!
கண்வளராய் பெண்மணியே!
பண்ணே பைந்தமிழே!
பண்புள்ள பெண்மகளே!
விண்ணிலே பவனிவரும்
வெண்மதியும் நீதானோ?
கண்ணிலே ஒளிபேசும்
கருவிழியும் நீதானோ?
மண்ணிலே பெண்ணாக
மகளாக வந்து
விட்டாய்!
எண்ணிடின் ஏழ்பிறப்பில்
என்னதவம் செய்தேனோ!
எண்ணென்ப எழுத்தென்ப
ஏடெடுத்துப் படிமகளே!
கண்ணென்ப கல்வியினைக்
கருத்தோடு பெறுமகளே!
எண்ணிய எண்ணி யாங்கு
எய்திடலாம்
பொன்மகளே!
எண்ணத்தில் திண்ணம்கொள்
எழில்மானே! என்மகளே!
-முனைவர்
அ.கோவிந்தராஜூ
Sunday, 5 March 2017
பதிவுத் திருமணம்
சென்ற வியாழக் கிழமை அன்று
(2.3.17) கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எனக்கும் சாந்திக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அல்லது திருமணப் பதிவு நடந்தது என்றும்
சொல்லலாம்.
Subscribe to:
Posts (Atom)