எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நன்கு உயரமாக வளர்ந்த மொந்தன் வாழைமரம் ஒன்று தெருப்பக்கம் சாய்ந்து நின்றது. அதிலிருந்து தொங்கிய பசுமையான கிழிந்த இலையுடன் கூடிய மட்டைகளைத் தெருவில் திரியும் மாடு கடிப்பதுண்டு. துணைவியார் அதைப் பார்க்கும் போதெல்லாம் மரத்தை நிமிர்த்தி ஒரு முட்டுக் கொடுக்கச்சொல்லி என்னை வற்புறுத்துவார். ஆனால் நான் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லிக் காலம் கடத்தினேன்.