Saturday, 21 January 2023

எந்நாளோ என்னும் ஏக்கம்

     இன்று பலரும் போகிற போக்கில்சாதிகள் ஒழியட்டும் மதங்கள் தொலையட்டும்எனச் சொல்லிச் செல்வதைப் பார்க்கிறோம். சாதி மத வேற்றுமைகள் ஒழிந்தால்தான் ஒற்றுமை ஏற்படும் என்று சிலர் ஓயாமல் ஓலமிடுவதும் நம் காதில் விழுகிறது.

Friday, 6 January 2023

சிறப்பாகப் பாடிய சிக்கில் குருச்சரண்

    பொதுவாகவே எனக்குச் செவ்வியல் இசையில் கொஞ்சம் நாட்டம் உண்டு. அதற்குக் காரணம் இருவர். ஒருவர் என் தமையனார் பேராசிரியர் பெருமாள். அவருக்குச் செவ்வியல் இசை கேட்பது பிடிக்கும். அது குறித்து நல்ல விமரிசனமும் செய்வார். அவருடன் சில காலம் இருந்ததால் அந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது.

Thursday, 29 December 2022

சாதலும் இனிது

        இதயத்தைக் கசக்கிப் பிழிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சங்கப் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுவாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான தருணங்களை எந்தப் புலவரும் பாட்டிலே கொண்டு வந்து காட்டமுடியும். ஆனால் சோகமான தருணத்தைப் பாட்டாக இயற்றுவது என்பது ஒரு சிலரால்தாம் இயலும். ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு சங்கப் புலவர் இயற்றிய பாட்டு நம்மை உள்ளுக்குள் அழ வைக்கிறது என்றால் அந்தப் புலவரின் திறனை என்னென்று சொல்வது!