Wednesday, 18 April 2018

விபத்தை விளைவிக்கும் விநாயகர்

   சிதம்பரம் கோவில் நகரம் எனக் குறிப்பிடும் அளவுக்கு தெருவுக்குத் தெரு கோவில்கள் காணப்படுகின்றன. கொஞ்சம் பெரிய கோவிலாக இருந்தால் திருக்குளமும் இருக்கும். போதிய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாத காரணத்தால் அந்தத் திருக்குளங்கள் பொதுமக்களின் கையகப்படுத்தலுக்கு உள்ளாகி இன்று கழிவு நீர்க் குட்டைகளாக மாறிவிட்டன. இளமையாக்கினார் கோவில் திருக்குளம் இதற்கு முதன்மையான எடுத்துக்காட்டாகும்.

Saturday, 7 April 2018

இன்சொல் இல்லா இந்தியா

   பத்து மாத வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளும் பல்வேறு அலுவலக வாயில்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். அலுவலக ஊழியர் பலரையும் சந்திக்கிறேன். பெரும்பாலோரிடத்தில் நான் எதிபார்த்த இன்சொல்லோ, ஒரு புன்னகையோ இல்லை. எதிரில் இருக்கைகள் தயாராக இருந்தாலும் அவர்கள் நிற்க வைத்தே பேசுகிறார்கள்; அதுவும் எதிரியிடம் பேசுவதைப் போல்.