Monday, 30 September 2024

ஆழ்வார் பாடலில் அறிவியல் நுட்பம்

    அடிப்படையில் நான் இயற்பியல் படித்த அறிவியல் பட்டதாரி. பின்னர் முதுகலையில் தமிழைப் படித்துத் தமிழாசிரியராய் ஆனேன். எனவே என் சட்டைப் பையில் அறிவியல் என்னும் கண் கண்ணாடி எப்போதும் இருக்கும். அவ்வப்போது அதை அணிந்து கொண்டு தமிழில் அமைந்த பழம்பாடல்களைப் பார்ப்பதுண்டு.

Thursday, 26 September 2024

தழுவுதல் என்பதும் தகைசால் பண்பே

   வழக்கம்போல் இந்த வாரமும் கனடா நாட்டில் நாங்கள் வாழும் பகுதியில் உள்ள உள்ளூர் நூலகத்திற்குச் சென்றேன். படிப்பதற்காகச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டுக்குச் சென்று தின்னலாம் என்று கூறி அப்பா கடையில் வாங்கித் தந்த தின்பண்டத்தில் அங்கேயே சிறிதை வாயிலே போட்டுச் சுவைக்கின்ற சிறு பிள்ளையைப்போல்  அவற்றுள் ஒரு நூலை அங்கேயே அமர்ந்து புரட்டினேன். சிறிது நேரம் ஆனதும் அது என்னைப் புரட்டிப் போட்டது.

Tuesday, 27 August 2024

மழலையர் விரும்பும் மாபெரும் நூலகம்

    செந்தமிழ் நாடு என்று சொல்லக் கேட்டவுடன், காதிலே தேன் வந்து பாய்ந்ததாகப் பாடுவான் பாரதி. எனக்கும் அப்படியே. கனடா நாட்டு நூலகம் ஒன்றைப் பார்த்தவுடன் கட்டுக் கரும்பை வெட்டித் தின்ற உணர்வு ஏற்பட்டது.