Sunday, 6 September 2026

சிறுவர்களால் சீரழிந்த சிறுமலர்

    இன்றைய தினமலரில் வெளிவந்த செய்தியொன்று என்னை நிலைகுலையச் செய்தது. இளைய தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் கதி கலங்குகிறது.

Friday, 14 August 2026

இல்லந்தோறும் கொடியேற்றுவோம்

   நம் நாட்டின் எண்பதாவது விடுதலை நாள் விழாவை நாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடும் தருணமிது. ‘நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்’ என்று பாடிய பாரதியோடு நாமும் நெஞ்சை நிமிர்த்திப் பாடும் நேரமிது.

Friday, 17 July 2026

ஆடிக் கும்மாயம்

   இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. என் துணைவியார் நேற்றே பூசைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பூசையின் ஒரு பகுதியாக இறைவனுக்கான படையல். இதுவரை செய்யாத ஒன்றைச் செய்து படைக்கப் போவதாய்ச் சொன்னார். அது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் என்று ஒரு புதிர் போட்டார். செட்டி நாட்டு உணவு வகையில் ஒன்று என்னும் குறிப்பையும் தந்தார். வாயில் எச்சில் ஊறியதே தவிர, மூளையில் ஒன்றும் ஊறவில்லை.