Monday, 26 September 2016

நம்மாலும் முடியும்

நூல் மதிப்புரை
(முனைவர் .கோவிந்தராஜூ)

   முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதி, கோவை விஜயா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள நம்மாலும் முடியும் என்னும் நூல் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு புது வரவாகும்.

Wednesday, 21 September 2016

மறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்

இன்று(21 செப்டம்பர்)  உலக அல்சீமர்ஸ் தினம்

    மனிதர்களுக்கு வரும் உடல் சார்ந்த  நோய்களைவிட மனம் சார்ந்த நோய்கள் கொடுமையானவை.

Saturday, 17 September 2016

செக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்

   போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன்? நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம் குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.

Monday, 12 September 2016

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அவ்வளவாகப் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தார் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

Saturday, 10 September 2016

வெள்ளத்தால் விளைந்த நன்மை

 வெள்ளத்தால் நன்மை விளையுமா? விளைந்துள்ளதே. 7.8.2016 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை என்னும் குளிரூட்டப்பட்ட அரங்கில், சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக நீதிபதி மூ.புகழேந்தி அவர்கள்  எழுதியுள்ள வெள்ளத் தாண்டவம் வரலாற்று மகா காவியம்  நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.

Monday, 5 September 2016

ஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்


 
 பாலியல் வன்முறை, கொலை, குடி, களவு இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பான செய்திகள் நாளும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. கவலை கொள்ளச் செய்கின்றன. இக் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக அல்லது படித்தவர்களாக இருக்கிறார்கள்.