Sunday, 5 November 2023

கற்றும் கவியுள்ளம் காணார்

  படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாத மாமனிதர் என்னுடைய அப்பா. அவர் விவசாய வேலைகள் இல்லாத சமயத்தில், அந்தக் காலத்து பெரிய எழுத்து இராமாயண நூலை வாய்விட்டுப் படித்ததைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து வசதி இல்லாத ஐம்பது அறுபதுகளில் குடும்பத்துடன் திருப்பதி சென்று வந்துள்ளார். இராம கதையில் மனம் ஈடுபட்டதாலோ என்னவோ எங்களுக்குப் பெருமாள், கிருஷ்ணன், கோவிந்தராஜூ எனப் பெயர்கள் வைத்தார்.

Tuesday, 24 October 2023

நாமக்கல் என்னும் நலம் தரும் சொல்

    உள்ளத்திற்கு வலிமை தரும் கவிதைகளைப் படைத்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் வாழ்ந்த ஊர் நாமக்கல். உடலுக்கு வலிமை தரும் முட்டைகளை உற்பத்தி செய்யும் ஊரும் நாமக்கல்தான். எனவேதான் நலம் தரும் சொல் எனக் குறிப்பிட்டேன்.

Tuesday, 3 October 2023

எஸ்ராவிடம் அடைந்த ஏமாற்றம்

    தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் அவ்வப்போது படிப்பதுண்டு. அண்மையில் படித்து முடித்த ஒரு நூல் 505 பக்கங்கள் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல். ‘வீரம் விளைந்ததுஎன்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.