கனடாவிற்கும் கவின்மிகு தமிழுக்கும்
ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இங்கே தமிழன்னை கழிபேருவகையுடன் களிநடம்
புரிகின்றாள். புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழ்கின்றாள். இதை டொரண்டோ தமிழ்ச் சங்கத்தில் நேரிடையாகப்
பார்த்தேன்.
Tuesday, 31 October 2017
Thursday, 26 October 2017
நூலக நாடு நூலகம் நாடு
எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும்.
நான் நான்காம் வகுப்பில் படித்தபோது எங்கள் ஊர் ஊராட்சி நூலகம் சென்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. அந்தச் சிறு வயதில்
தொடங்கிய நூலக ஆர்வம் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து நூலக
அறிவியலில் ஒரு பட்டம் பெறவும் அடித்தளமாக அமைந்தது.
Friday, 20 October 2017
நா.பா. பார்வையில் காதல்
காதல் என்பது செம்புலப் பெயல்
நீரைப்போல் மனங்கலத்தல் ஆகும். உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக்
கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது
என்னும் கருத்தை நா.பார்த்தசாரதி அவர்கள் தம் நாவல்கள் பலவற்றில் மணியிடை இழையாக வைத்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)