இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. என் துணைவியார் நேற்றே பூசைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பூசையின் ஒரு பகுதியாக இறைவனுக்கான படையல். இதுவரை செய்யாத ஒன்றைச் செய்து படைக்கப் போவதாய்ச் சொன்னார். அது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் என்று ஒரு புதிர் போட்டார். செட்டி நாட்டு உணவு வகையில் ஒன்று என்னும் குறிப்பையும் தந்தார். வாயில் எச்சில் ஊறியதே தவிர, மூளையில் ஒன்றும் ஊறவில்லை.
Friday, 17 July 2026
Tuesday, 28 April 2026
கள் பெற்ற பெருவாழ்வு
இப்படியொரு தலைப்பில் பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய கட்டுரையின் நீட்சியே இப்பதிவு.
Saturday, 25 April 2026
குறள் வகுப்புக்குக் குன்றனைய வரவேற்பு
திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும் என்னும் முனைப்போடு செயல்பட்டு வருபவர் வள்ளுவர் கல்லூரியின் நிறுவுநர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்.
Thursday, 23 April 2026
வாக்களித்த வரலாறு
முதல் ஆளாகச் சென்று வாக்களித்து விடுவது என்று மூன்று நாள்களுக்கு முன் முடிவெடுத்தேன். அதன்படி இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாக்குச் சாவடிக்குச் செல்ல ஆயத்தமானேன்.
Wednesday, 1 April 2026
வள்ளுவர் பார்வையில் வடிகட்டிய முட்டாள்
இன்று உலக முட்டாள்கள் நாள். வள்ளுவர் பார்வையில் யாரெல்லாம் முட்டாள்கள் என அறிவதற்கு என் மனம் விழைந்தது. அதன் விளைவுதான் இப்பதிவு.
Wednesday, 25 March 2026
அறவழி பிறழ்ந்தால் ஐவர் சிரிப்பர்
தனி மனித ஒழுக்கக்கேடு அவனோடு நிற்காது. அதன் பாதிப்பு எல்லாப் பக்கமும் தொடரும். ஒரு நீண்ட சரவெடியில் ஒரு வெடியில் தீப்பற்றினாலும் அனைத்தையும் வெடிக்கச் செய்தல் போல, தனிமனிதனுடைய ஒழுக்கக்கேடு அவனோடு நிற்பதில்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவன் மனைவி மக்களை சொல்லக் கூடாத சொல்லால் காயப்படுத்துகிறான். பிறகு கண்ணில் பட்டவற்றை எடுத்து அவர்கள் மீது வீசிக் காயப்படுத்துகிறான். சமாதானம் செய்ய வந்த அண்டை வீட்டுக்காரனையும் அடிக்கிறான்.
பிறர் மனைவியுடன் ஒருவன் பாலியல் தொடர்பில் உள்ளான் எனின் அது தனிமனித ஒழுக்கக்கேடு. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அது வெளியில் தெரியும்போது இரண்டு வீடுகளிலும் இடிவிழுந்தாற்போல் நிலைமை மோசமாகிறது. தொடர்புடைய இருவரும் அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்பில்லாத இருவரும் கூனிக் குறுகி நிற்கின்றனர். சில சமயம் கொலையில் கூட முடிந்து விடுகிறது.
அறவழியில் வரும் இன்பத்தை மட்டுமே ஒருவன் பயமின்றி, பழியின்றித் துய்க்க முடியும் என்பதை மெத்தப் படித்தவர்கள் கூட அறியாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என வள்ளுவர் அடித்துச் சொல்லியும் பலர் அவர் பேச்சைக் கேட்பதில்லை.
படிற்றொழுக்கம் உடையவனைப் பார்த்து அவனோடு வாழும் ஐந்து பேர்கள் எள்ளி நகைப்பர் என்று வள்ளுவர் கூறுகிறார்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (குறள் 271)
The five elements (Pañcabhūta) will laugh within
At a hypocrite's fraudulent conduct.
படிறு + ஒழுக்கம் =படிற்றொழுக்கம். படிறு என்பது ஏழு வகையான குற்றங்களை உள்ளடக்கிய ஒற்றைச் சொல்லாகும் என்று நாசா விஞ்ஞானி நா.கணேசன் கூறுகிறார். அவர் கொடுக்கும் பட்டியல் பின்வருமாறு:
படிறு paṭiṟu
, n.
1.
Lying, falsehood; பொய். (பிங்.)
2.
Deceit, fraud; வஞ்சனை. (திவா.) படிறிலவாஞ் செம்பொருள் (குறள், 91).
3.
Unruliness, lawlessness; அடங்காத்தனம்.
4.
Mischief; குறும்பு. படிறு பலசெய்து (திவ். பெரியாழ். 3, 2, 6).
5.
Stealth; திருட்டு. (பிங்.)
6.
Clandestine union; களவுப்புணர்ச்சி. மேவும் படிறுவவேம் (திருக்கோ. 390).
7.
Cruelty, wickedness; கொடுமை. ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித். 89).
இவற்றுள்
ஒன்றையோ பலவற்றையோ தெரிந்தே செய்யும் ஒருவர் ஆசிரியராக, அலுவலராக, அரசியல் தலைவராக,
ஆன்மிகக் குருவாக வேடந்தாங்கி சமுதாயத்தில் வலம் வருவதைக் காணும்போது, அவனோடு பயணம்
செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பேர்களும் தமக்குள் பேசி, கைகொட்டி
நகைப்பார்களாம்!
-முனைவர் அ.கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்.
Saturday, 14 February 2026
காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்கள்
நேற்று இரவு பன்னிரண்டு மணியளவில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. இன்று காலையில் விசாரித்தபோது தெரிந்தது – காதலர் தினத்தை அப்படி வரவேற்றார்களாம்!
Wednesday, 14 January 2026
மார்கழிக் கொண்டாட்டம்
மார்கழி என்றாலே எங்கள் இல்லத்தில் கொண்டாட்டம்தான். காலை ஐந்து மணிக்கு எழுந்தவுடன் முதல் வேலையாக எம்.எல்.வசந்தகுமாரியின் திருப்பாவையை ஒலிக்க விடுவேன்.
Sunday, 14 December 2025
வேர்களைக் கொண்டாடிய விழுதுகள்
என் வாழ்க்கையில் கால் நூற்றாண்டு காலம் பயனுள்ள வகையில் கழிந்தது கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில். முதுகலைத் தமிழாசிரியராக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக, உதவித் தலைமையாசிரியராக, தலைமையாசிரியராக அப் பள்ளியில் பணியாற்றியபோது என் பாசவலைக்குள் சிக்கிய மாணாக்கச் செல்வங்கள் பல்லாயிரம் பேர்கள். அவர்களுள் முப்பது நாற்பது பேர்கள் நேற்று(13.12.2025) என்னைக் கண்டு வணங்கி வாழ்த்து பெற்றார்கள். பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள் எனக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது கோபி திருக்குறள் பேரவை.
கோபி திருக்குறள் பேரவையின் 52-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக தவத்திரு குன்றக்குடி
பெரிய அடிகளார், தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆகியோரின் நூற்றாண்டுவிழா
நினைவுப் பேருரையை பேரூர் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரும், ஈரோடு ஸ்டாலின்
குணசேகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். கேட்டாரைப் பிணிக்கும் வகையிலே இருபெரும் உரைகளும்
அமைந்தன.
தொடர்ந்து சாதனையாளர்க்கு விருதுகள் வழங்கும் விழாவும், நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பேராசிரியர் இரா.கா.மாணிக்கம் அவர்களுக்கான நினைவு மலரை வெளியிட்டு உரையும் நிகழ்த்தினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ச.கந்தசாமி அவர்கள். அவரே போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
முன்னதாக , என்னை முனைவர் பேற்றுக்கு ஆளாக்கி மகிழ்ந்த என் ஆசான் பேராசிரியர் இரா.கா. மாணிக்கனார் குறித்து ஓர் உரையாற்றுவதற்கும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்கிறேன்.
நான் கோபியில் பணீயாற்றிய காலத்தில் கோபி திருக்குறள் பேரவையில் இணைந்து செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு,
இந்த விழாவில் அடியேனுக்குத் ‘திருவள்ளுவர் விருது’ வழங்கியபோது அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். இதே விழாவில் இந்த எளியவன் எழுதிய திருக்குறள் உரைவெண்பா நூல் வெளியான நிகழ்வும் என் வாழ்வில் என்றும் நினைக்கத்தக்க நிகழ்வாகும். இவற்றுக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னிடம் படித்த மாணவர்களே. அவர்களுக்கெல்லாம்
எப்படி நன்றி சொல்வேன்!
கோபி முத்துமகால் அரங்கம் மிகப்பெரியது. அதில் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கண்டபோது பெரிதும் வியப்படைந்தேன்.
இந்த விழாவின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும் இருவர் குறிப்பிடத்
தகுந்தவர்கள். ஒருவர் பேராசிரியர் அரங்கசாமி அவர்களின் இளையமகன் அர.அருளரசு. மற்றவர்
திருக்குறள் பேரவையின் தலைவர் பேராசிரியர் நீ.வ.கருப்புசாமி. கடந்த இரு மாதங்களில்
இவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்ட பாங்கினை நான் அறிவேன்.
விழா முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அனைவரிடமும் விடைபெற்றோம் நானும் என் துணவியாரும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
Tuesday, 25 November 2025
வள்ளுவமும் வாழைமரமும்
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நன்கு உயரமாக வளர்ந்த மொந்தன் வாழைமரம் ஒன்று தெருப்பக்கம் சாய்ந்து நின்றது. அதிலிருந்து தொங்கிய பசுமையான கிழிந்த இலையுடன் கூடிய மட்டைகளைத் தெருவில் திரியும் மாடு கடிப்பதுண்டு. துணைவியார் அதைப் பார்க்கும் போதெல்லாம் மரத்தை நிமிர்த்தி ஒரு முட்டுக் கொடுக்கச்சொல்லி என்னை வற்புறுத்துவார். ஆனால் நான் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லிக் காலம் கடத்தினேன்.
Wednesday, 1 October 2025
எழுத்தறிவித்த இறைவனைக் கண்டேன்
Monday, 1 September 2025
கண்டறியாதன கண்டேன்: வெளிவிருத்தம்
மரபு சார்ந்த கவிதை குறித்த யாப்பியல் செய்திகள் கணக்கில் அடங்கா. அண்மையில் ஒரு புதிய யாப்பு வகை குறித்து யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலில் வரும் ஒரு சிறு குறிப்பைப் பார்த்தேன். பின்னர் பிற யாப்பியல் நூல்களையும் படித்து, இந்தப் பாவகை பற்றிய செய்திகளைத் தொகுத்தேன். அவை பின்வருமாறு:
இப் பாவகைக்கு வெளிவிருத்தம் என்று பெயர்.
சிந்தியல் அல்லது அளவியல் பாவாக மட்டும்
அமையும். அதாவது மூன்று அல்லது நான்கு அடிகளை மட்டும் கொண்டிருக்கும். ஒவ்வோர் அடியிலும்
நான்கு சீர்கள் அமையும்; அவற்றைத் தொடர்ந்து ஈரசை அல்லது மூவசை கொண்ட தனிச்சொல் அமையும்.
அதிலும் ஓர் இன்றியமையாத குறிப்பு உண்டு. முதல் அடியில் அமையும் தனிச்சொல்லே அடுத்தடுத்த
அடிகளிலும் அமையும். அடி தோறும் ஓரெதுகை அமையும்.
முதல் அடியில் அமையும் வாய்பாட்டில் மற்ற அடிகளும் அமைந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்கும்.
இது வெண்பாவுக்குரிய பாவினம் என்பதால். வெண்டளைகளால்
அமைதல் சிறப்புடைத்து. எனினும் பிற தளைகள் விரவி வரலாம் என்கிறார் இலந்தை சு.இராமசாமி, மருதூர் அரங்கராசன் ஆகியோர்.
இக் கருத்தில் பாவலர் ப.எழில்வாணன் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு.
மேற்காண் விதிகளுக்கு உட்பட்டு விநாயகர்
சதுர்த்தியன்று சில வெளிவிருத்தங்களை எழுதினேன். சிறப்பாக உள்ளதா என்பதை வாசகர்கள்
சொல்ல வேண்டும்.
விநாயகர் வெளிவிருத்தம்
(வெண்டளைகளால் அமைந்தது மா மா விளம் மா)
செய்யும் வினையைச் செயவிடு நன்றே – விநாயகனே
உய்யும் வழியை உரைத்திடு மெல்ல – விநாயகனே
பெய்யும் மழைபோல் பெரிதெனச் செய்க – விநாயகனே.
(வாய்பாடு: மா மா விளம் விளம்)
வையம் போற்றும் வான்புகழ் உடையவன் – நீதானே
ஐயம் இன்றி அருட்கொடை தருபவன் – நீதானே
கையால் தொழுதால் கருணையைச் செய்வதும் – நீதானே.
(வாய்பாடு: விளம் மா மா மா)
மோதகம் என்றால் மோகம் கொள்வாய் – விநாயகனே
பாதகம் செய்யின் பார்க்க மாட்டாய் – விநாயகனே
வேதனை தீர்க்க விரைந்து வருவாய் – விநாயகனே.
(வாய்பாடு: மா மா விளம் மா)
யானை முகத்தான் அருள்செய வருவான் – யானறிவேன்
பானை வயிறோன் பார்த்திட முக்தி – யானறிவேன்
மோனை போன்ற முதல்வனும் அவனே – யானறிவேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
(கவிஞர் கருவூர் இனியன்)
Monday, 9 June 2025
வறியோர்க்கு உதவிட வழி செய்யும் நூலகம்
கனடாவில் என் மகளுடன் இருக்கும் காலத்தில் அவ்வப்போது நூலகத்திற்குச் செல்வதுண்டு. இம்மை உலகத்திலிருந்து மறுமை உலகத்திற்குச் சென்ற மனமகிழ்ச்சியில் அரைநாள் பொழுதை அங்கே கழிப்பதுண்டு.
Sunday, 8 June 2025
கனடாவிலும் வந்தது காற்று மாசு
காதில் வந்து விழுந்த செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சுவாசிக்கும் மூச்சுக்காற்று கெட்டு விட்டதால் மூச்சு முட்டுகிறதாம். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறையாம். காற்றில் கலந்த தூசு மற்றும் உலோகத் துகள்களைப் போக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்தக் கூத்தெல்லாம் எங்கே நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? வேறு எங்கே? நம் நாட்டின் தலைநகரான புது தில்லியில்தான்!
Monday, 2 June 2025
விளாங்காய்ச் சீருக்கான விளக்கம்
செப்பலோசை அமையாமல் பலரும் வெண்பா எழுதுவதைக் கண்டு மனம் நொந்து ஒரு வெண்பா எழுதினார் மதிப்பிற்குரிய பெரியவர் ஈழம் தமிழப்பனார். அவர் எழுதிய வெண்பா இது:
செப்-பலோ-சை வாராமல் செந்தமிழில் வெண்பாக்கள்/
எப்பவுமே கூறும் இயல்பினரைத் –தப்பாமல்/
வெல்லம்போல் அள்ளுசுவை வெண்பா இலக்கண
எல்லையை மீறின் எதிர்.
உங்கள் வெண்பாவில் ‘செப்பலோசை’ என்னும் விளாங்காய்ச் சீர் செப்பலோசையைக் கெடுத்துவிடுமே ஐயா என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு மறு(ப்பு) மொழியாக விளாங்காய்ச் சீர் வெண்பாவில் வரலாம் எனக் கூறியதோடு நில்லாமல், விளாங்காய்ச் சீர் வருவதைத் தவிர்க்கலாம் என்போரின் கூற்று ஏற்கத்தக்கது அன்று என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். (கேட்க
அதைத் தொடர்ந்து, விளங்காய்ச் சீருக்கான விளக்கத்தைத் தேடினேன்.
வெண்பாவுக்குரிய செப்பலோசையைக் கெடுக்கும் என்பதால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
சைவத் திருமுறைகள்முதலான மரபிலக்கியங்களில் விளாங்காய்ச் சீர் பயன்படுத்தப்படவில்லை
என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார் தமிழறிஞரும் நாசா விஞ்ஞானியுமான முனைவர் நா.கணேசன்
அவர்கள். (பார்க்க: https://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html)
பாரதியாரும் கண்ணதாசனும் கூட விளாங்காய்ச்சீரைத்
தொடவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
திருக்குறளில் பல இடங்களில் இந்த விளங்காய்ச்
சீர் இடம் பெற்றுள்ளதாய்ச் சிலர் சுட்டிக்காட்டுவதை அவர் தகுந்த சான்றுகளுடன் மறுக்கின்றார்.
அதற்கு ஆதாரமாகப் பணிநிறைவு பெற்ற
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இராம.சுப்பிரமணியம்
எழுதியுள்ள ‘கணக்கு வழக்கு இலக்கிய இலக்கணம்’ என்னும் நூலிலிருந்து உரிய சான்றுகளை
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குகின்றார்.
அளபெடை, விகாரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்
போன்ற இலக்கண நுட்பங்களை அறியாதவர்களே வள்ளுவர் விளாங்காய்ச்சீர்களைக் கையாண்டுள்ளதாகப் பிறழ உணர்கின்றனர் எனப் பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் தம் நூலில் நிறுவுகிறார் என்பதை முனைவர் நா.கணேசன் அவர்கள் நிரல்பட
விளக்கிக் கூறுகின்றார். செப்பலோசையைக் கெடுக்கும் விளாங்காய்ச் சீரை வள்ளுவர் தம்
நூலில் ஓர் இடத்தில் கூட கையாளவில்லை என்பதை முதன்முதலில் எடுத்துக் கூறியதால், பேராசிரியர்
இராம.சுப்பிரமணியம் அவர்களுக்கு,
விளாங்காய்ச்சீர் பாவில் விளங்காச்சீ ரென்று
விளக்கிய
வித்தகரைப் போற்று
என ஒரு குறள்வெண்பாவை இயற்றி அவருக்குப் புகழ்மாலையாகச் சூட்டுகிறார்.
மேலும் குமரகுருதாச பாம்பன் சுவாமிகளின்
விதப்ப விதியை ஆதாரமாக மதுரன் தமிழவேள் என்பார் சுட்டிக் காட்டுவதை முன் வைக்கின்றார்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டு” என்னும் நூலில் உள்ள விதப்ப
விதியின் உரையாவது: “
வெண்பாவுக்குரிய
காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’
என்பது போன்ற
கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக.
கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.” (பார்க்க: https://madhuramoli.com)
நம் காலத்துத் தமிழறிஞர்களின் தமிழறிஞர்களின்
கருத்துகளையும் தொகுத்துத் தருகிறார்.
சைவத்
திருமுறைகளில் உள்ள வெண்பாக்களில் எங்கும்
விளாங்காய்ச்
சீர் இல்லை. (விதிவிலக்காக நமச்சிவாய என்னும் சொல் திருவாசகத்தில்) க. வச்சிரவேல் முதலியார் குறிப்பிடுகிறார்.
(பார்க்க http://shaivam.org/siddhanta/san-thiruvarutpayan-vachiravelmudaliyar-urai.pdf
வெண்பாவில்
‘வீடுபேற்றை’, ‘கேட்கமாட்டேன்’ என்பன போன்ற விளாங்காய்ச்
சீர் வரலாமா? என்ற கேள்விக்கு வெண்பாவில் என்ன எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத்
தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப் பாவுக்குரிய
ஓசையைக் கெடுத்துவிடும் என்று விடையிறுக்கின்றார் ’இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகன்.
கி.வா.ஜ. வின் கவி
பாடலாம் வாங்க புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியில் பக்கம் 228 கேள்வி 15:
வேல்பற்றும்
கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்/
கால்பற்றிக்
காண்போம் கதி.
கேள்வி: இந்த
வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?
பதில்: ’முதலடியில் இரண்டாம் சீரில் இடையில்
விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது.
அப்படி வருவது தவறு’
சாமிநாதன்
என்னும் இறைவன் பெயரை ஒரு சீராய் வைத்தால் ஓசை கெடும் எனக்
கருதிய வள்ளலார் அதைத் தவிர்க்க வேண்டி வகையுளியாய் அமைத்துள்ளதைச் சான்றாகத்
தருகிறார்.
நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்/
என்னிலையை
அந்நிலையே எய்துதிகாண் – முன்னிலையை/
இற்குருவி
னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்/
சற்குருஎன் சாமிநா தன்.
திருமுருக கிருபானந்த வாரியாரின் வெண்பா ஒன்றையும் சான்றாகத் தருகிறார்.
கண்ணதாசன் என்னும் விளாங்காய்ச் சீர் அமையாத வெண்பா:
எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன்
கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து..
‘விளாங்காய்ச்சீர் வருவதாகச் சொல்லப்படும் ஒன்றிரண்டு வெண்பாவும், ஆய்ந்து பார்த்தால் ஏட்டில் இருந்து
அச்சுக்குப் போந்தபோது ஏற்பட்ட கவனப் பிசகான பிழைகள் என்பது என் புரிதல்” என்று சந்தவசந்தத்தில் கூறியுள்ளதாக ஒரு கட்டுரையில்
எழுதுகிறார் முனைவர் நா.கணேசன்.
சந்த வசந்தம்
குழுமத்தைத் சேர்ந்த பெரும்புலவர்கள் இலந்தை சு.இராமசாமி, முனைவர் சு.பசுபதி,
திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி, கவிஞர் குருநாதன் இரமணி, திரு.இராமகிருஷ்ணன், திரு,ஹரிகிருஷ்ணன்
போன்றோரும் விளாங்காய்ச்சீர் வெண்பாவில் இடம்பெறலாகாது என்று உறுதியாகக் கூறுவதை
யானே அறிவேன்.
அகரம்
அமுதா என்பவர் விளாங்காய் ஆகாது என விரிவாகப் பேசுகிறார். (பார்க்க: http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/03/38.html)
அதே சமயம் பாவலர் மா.வரதராசன், கனடா சி.ஜெயபாரதன்,
ஈழம் தமிழப்பனார் ஆகியோர் விளாங்காய்ச்சீரை ஒதுக்கத் தேவையில்லை என்கின்றனர்.
வள்ளுவரே இச் சீரைத்
தவிர்க்கும்போது அதை நாம் வெண்பாவில் பயன்படுத்தி, வள்ளுவரைவிட நுண்மாண் நுழைபுலம்
மிக்கவராய்க் காட்டிக் கொள்வதை என் சிறுமதி ஏற்கமறுக்கிறது.
எது எப்படியோ, விளாங்காய்ச் சீர் குறித்து இந்தப்
பதிவை இடுவதற்கு வழிவகுத்த முனைவர் ஈழம் தமிழப்பனார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
உரித்தாகுக.
முனைவர் அ. கோவிந்தராஜூ,
துச்சில்: கனடா
Saturday, 29 March 2025
சுந்தர் பிச்சையும் கரப்பான் பூச்சியும்
ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்தக் கரப்பான் பூச்சியை அவர் மீதிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
Thursday, 20 March 2025
காதுக்கு எட்டிய கரூர் சதி வழக்குச் செய்தி
‘கரூர் சதி வழக்கு’ என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
Monday, 24 February 2025
நான் பார்த்த நல்ல படம்
Wednesday, 12 February 2025
ஹூப்பனோபனோ
Sunday, 9 February 2025
தரமில்லாத தமிழ் சினிமா
கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் இருபது வயது மாணவி தவறான வழியில் உறவு வைத்துக் கருவைச் சுமந்தாள். அவள் கழிவறைக்குள் சென்று தானே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாள். மயங்கி விழுந்த அப் பெண்ணை, விடுதிக் காப்பாளர் மருத்துவமனையில் சேர்த்தார், தாயும் சேயும் நலம் என நம்மூர் நாளேடு செய்தி வெளியிட்டு நாலு காசு பார்த்தது.
